Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 260 தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் நகர் மன்ற தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பெண் பணியாளர்களுக்கு சேலையும், 60 ஆண் பணியாளர்களுக்கு வேட்டி, சட்டைகளை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வழங்கினார்.
நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக உள்ள 200 பெண்கள் 60 ஆண்கள் என 260 பேருக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரூ1 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டது.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேரன் சக்திவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், டி கே ஜி ராஜா, தாமரைச்செல்வி மணிகண்டன், செல்வி ராஜவேல் என பலரும் கலந்து கொண்டனர்.
புத்தாடைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்கள் நகர்மன்றத் தலைவருக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.